×

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3 ரவுடிகளுக்கு குண்டாஸ்

ஸ்ரீபெரும்புதூர்:  ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (21). இவர் மீது மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, ஆள்கடத்தல், அடிதடி , திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் ஒரகடம் அருகே நாட்டரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் (21), மற்றும் வட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முத்து பாண்டி (23) ஆகிய இருவர் மீதும் மேற்கண்ட காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மேற்கண்ட மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

Tags : Sriperumbudur ,
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...