மன்னார்குடி, டிச. 27: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மண் சாலைகளை பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கோரையாறு ஆற்றங்கரை சாலை, தென்றல் நகரில் 2,3, மற்றும் 5ம் எண் சாலைகள் மற்றும் ரகுமான் சாலை ஆகியவைகள் ேபவர் பிளாக் சாலைகளாக மாற்றப்படுகின்றன.இப் பணிகளுக்கான துவக்க நிகழ்ச்சி தென்றல் நகரில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். ரூ 2 கோடியே 4 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார் அப்போது அவர் கூறுகையில், கனமழை காரணமாக கூத்தாநல்லூர் நகரத்தில் சேதமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் புதுப்பித்துத் தரப்படும் என்றார்.