×

தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரளான தொண்டர்கள் வரவேற்பு அளிக்க வேண்டும்

ஒரத்தநாடு,டிச.27: தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரளான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் கூறினார். ஒரத்தநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு திமுக மற்றும் பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்பி பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் பார்வதி சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

இதில் தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் பேசியதாவது: தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பெருந்திரளான தொண்டர்களை கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். செங்கிப்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டு அதனை தொடர்ந்து தஞ்சையில் கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கலைஞர் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து 30ம் தேதி தஞ்சையில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதில் அனைத்து பொதுமக்களும், திராவிடர் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முனைப்போடு செயல்பட்டு தலைவரின் ஆணைக்கிணங்க அனைத்து வார்டு மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பொறுப்புகளை வெற்றி பெற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் திமுக வென்றது என்ற பெருமையோடு தலைவரை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, மணிவண்ணன், நாதன் செல்வராஜ், இளங்கோவன், மலர்வண்ணன், பாரத், உத்திராபதி, கார்த்திகை செல்வி மற்றும் ஊராட்சி, ஒன்றிய, நகர, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை தெற்கு ஒன்றியம்: தஞ்சை தெற்கு மாவட்டம் திருவோணம் தெற்கு ஒன்றிய திமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல். தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தங்கராசு, திருவோணம் ஒன்றிய குழு தலைவர் செல்லம், திருவோணம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோம கண்ணப்பன், அவைத்தலைவர் கோவிந்தராசு, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Tanjore district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...