×

திருவில்லி. யூனியன் பகுதியில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

திருவில்லிபுத்தூர், டிச. 25: திருவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி நேரில் ஆய்வு செய்தார். மேலும், இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் கலந்து ஆலோசித்தார்.திருவில்லிபுத்தூரில் யூனியன் பகுதியில் பாட்டகுளம் ஜல்லிப்பட்டி பகுதியில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்துதல் பணி பேவர் பிளாக் கல் பதித்தல் பணி மற்றும் சர்வே பணிகள் நடைபெற்றது. இதேபோல் பூவாணி பகுதியில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்துதல், சிமிண்ட் தளம், பண்ணைகுட்டை அமைத்தல், பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணி, ஊராட்சி பதிவேடுகள் ஆய்வு, குடிநீர் குளோரினேசன் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி நடைபெறுகிற பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனை கூறினார்.

இந்தாய்வின்போது, திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி மற்றும் சிவகுமார், உதவி பொறியாளர் முத்துக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, பணி மேற்பார்வையாளர் குருசாமி, ஊராட்சி செயலாளர் செலினா முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvilli ,
× RELATED திருவில்லியில் இன்று மின்தடை