×

‘தெய்வானை’ மீண்டும் கோபம்

திருப்பரங்குன்றம், டிச. 25: திருப்பரங்குனறம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண் யானை தெய்வானை நேற்று மாலை கோயில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது. அப்போது கோயில் அலுவலர் புகழேந்தி யானைக்கு உணவு கொடுத்துள்ளார். அப்போது திடீரென யானை அவரை துதிக்கையால் கீழே தள்ளி விட்டது. உடனடியாக பாகன் யானையை கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றார். பின்னர் பணியாளர்கள் காயமடைந்த புகழேந்தியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். யானை தாக்கியதை கண்ட பக்தர்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். இதனால் கோயில் வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தெய்வானை யானை தாக்கியதில் இதுவரை 3 பாகன்கள் காயமடைந்துள்ளதுடன், கடந்த 2020ம் ஆண்டு மே 24ல் பாகன் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Goddess ,
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...