×

தமிழக கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயக்க வேண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

சின்னாளபட்டி, டிச. 25: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயக்கி கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கல்வி நிதியை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வி நிதிக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் முன்னிலையில் கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் மாதவன் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்திற்கான காசோலையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வழங்கினார்.

காசோலையை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஐ.ெபரியசாமி பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயக்கி வரும் ஆண்டு அதிக அளவில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வி நிதியை வழங்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் சரக துணை பதிவாளர் சு.முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ம.செல்வகுமார், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர்கள் சி.சக்கரவர்த்தி மணிமாறன், இரா.கணேசன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், எல்லைப்பட்டி ராமகிருஷ்ணன், 7வது வார்டு செயற்குழு உறுப்பினர் சு.சுபாஷ் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,I. Periyasamy ,Tamil Nadu Co-operative Societies ,
× RELATED சிஏஏ எதிர்த்து போராட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து