×

வத்தலக்குண்டு அருகே தந்தை பெரியாரின் நினைவு நாள்

வத்தலக்குண்டு, டிச. 25: வத்தலக்குண்டுவில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் தந்தை பெரியார் 48வது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரியாரின் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கட்சியின் நில மீட்பு இயக்க மாநில துணைச்செயலாளர் உலகநம்பி தலைமை வகித்தார். மதிமுக நகர செயலாளர் வால்டர் ராஜா,  ஆட்டோ  பெரியார் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மதுரைவீரன், அல்லாப்பிச்சை. அலாவுதீன். காட்டு ராஜா. ராஜ்வளவன். தங்க முருகன். அழகு ராஜா. கருப்பு. வக்கீல், கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் கட்சி சார்பாக மாலை அணிவித்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி சக்தி சரவணன் முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டுவில் ஒன்றிய மதிமுக சார்பில் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றியசெயலாளர் மருதுஆறுமுகம் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

Tags : Father Periyar ,Memorial Day ,Vattalakundu ,
× RELATED வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார்...