அந்தியூர், டிச.25: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பெரியார் திருவுருவப் படத்திற்கு எம்எல்ஏ அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், பேரூர் கழக திமுக பொறுப்பாளர் எஸ்கே காளிதாஸ், ஒன்றிய அவைத்தலைவர் காளிமுத்து, பேரூர் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி, கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி. ரமேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், தகவல் தொழில் நுட்ப அணி சமூகவலைதள பொறுப்பாளர் நாகராஜ், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், பேரூர் கழக அவைத்தலைவர் காளமேகம், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்ரீரங்கபிரபு, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் தர்மலிங்கம் சுப்பிரமணி உள்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதேபோல், மைக்கேல்பாளையம் ஊராட்சியில் உள்ள பெரியார் சிலைக்கு ஊராட்சி தலைவர் சரவணன் தலைமையில் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.