பொன்னமராவதி, டிச.25: ஒலியமங்கலம் கிராமத்தில் கணினி சிட்டாவில் திருத்தம் முகாமில் தாசில்தார் ஜெயபாரதி பெயர் திருத்தம் செய்யப்பட்ட ஆணைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். பொன்னமராவதி அருகே ஒலியமங்கலம் கிராமத்தில் கணினி அ பதிவேடு கணினி சிட்டாவில் பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் ஜெயபாரதி தலைமை வகித்தார். ஒலியமங்கலம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கணினி அ பதிவேடு கணினி, சிட்டாவில் பெயர் திருத்தம், உறவுமுறை திருத்தம், உரிமையாளர் பெயர் திருத்தம் மற்றும் பட்டாவில் உறவுமுறை திருத்தம் செய்யப்பட்ட ஆணையினை தாசில்தார் ஜெயபாரதி பொது மக்களுக்கு வழங்கினார்.
இதில் மண்டல துணை தாசில்தார் பிரகாஷ், வட்டத்துணை ஆய்வாளர் கார்த்திகேயன், வட்ட சார் ஆய்வாளர் தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் பாண்டி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அங்குலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.