ஜெயங்கொண்டம்,
டிச.25: காட்டகரம் ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்
காட்டகாரம் அம்மன்கோயில் திடலில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்.
செல்வதுரை. தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்.ஆறுமுகம். முன்னிலை வகித்தார்.
ஊராட்சிசெயலாளர். பாலகுரு. தீர்மானங்களை வாசித்தார். வரும் 2021-2022ம்
ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கால்நடை
பராமரிப்பு நீர்ப்பாசனம் பொது சுகாதாரம் மகளிர் சிறு குழந்தைகள் மாற்றுத்
திறனாளிகள் மேம்பாடு கல்வி தொழிற்கல்வி குடும்ப நலன் வறுமை ஒழிப்பு திட்டம்
ஆகியவற்றை பற்றி மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வட்டாரவளர்ச்சிதுறை. கண்ணன் வேளாண்மை.துறை பாலாஜி. மின்சாரதுறை.
பாரி.மற்றும்.காட்டகரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், தொடக்க
வேளாண்மை அலுவலர் கலியவரதன். மீன்சுருட்டி போலீஸார் மற்றும்.ஊராட்சி மன்ற.
உறுப்பினர்கள். சுகாதார பனியாளர்கள்.மேல்நீர்தேக்கதொட்டி. இயக்குனர்கள்..
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.