×

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம்

செம்பனார்கோயில், டிச.25: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பனார்கோயில், திருச்சம்பள்ளி (வல்லம்), முக்கரும்பூர், மாத்தூர், மடப்புரம், காளகஸ்திநாதபுரம் ஆகிய 6 ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தர் தலைமை தாங்கினார். தாசில்தார் ஹரிதரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முகாமில் 10 குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு வழங்கினார். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விசுவநாதன், துரை மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Sembanarkoil Union ,
× RELATED செம்பனார்கோயிலில் திமுக மூத்த...