×

குளித்தலை பெரியார் நகரில் துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு

குளித்தலை, டிச. 25: கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(58). யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி அறையில் குடும்பத்துடன் தூங்கச் சென்று உள்ளனர். நேற்று அதிகாலை ராஜேந்திரனின் மனைவி கோலம் போடுவதற்காக வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் முன்கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் பார்த்தபோது ஒரு அறையில் பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தார். இச்சம்பவத்தில் எவ்வித பொருட்களும் திருட்டு போகவில்லை என தெரிய வந்தது.

Tags : Robbery ,Kulithalai Periyar ,
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்