க.பரமத்தி, டிச. 25: க.பரமத்தியில் நடந்த பட்டா பிரச்னைக்கு தீர்வு காணும் சிறப்பு முகாமில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அதன் சான்றிதழ்களை உரியவர்களிடம் அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ வழங்கினார். க.பரமத்தி ஒன்றியம் க.பரமத்தி ஊராட்சி பகுதி மக்களுக்கான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடைபெற்றது. விஏஓ உஷாராணி வரவேற்றார். புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் பூபதி, மண்டல துணை தாசில்தார் அன்பழகன், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.