விருத்தாசலம், டிச. 25: விருத்தாசலம், கோபாலபுரத்தில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின பெரு விழா பள்ளித் தாளாளர் ஜெயசங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆசிரியை அனிஷா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சுமதி இயேசுவை பற்றிய பாடல் பாடினார். ஆசிரியர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் அருள்செல்வன் கவிதை வாசித்தனர். ரவினா, ஜாய்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடனம் ஆடினர்.
பள்ளி முதல்வர் முருகன் இயேசு பிரானுடைய சிறப்புகளை கோடிட்டுக்காட்டி ஈவு இரக்கமே மனிதனுடைய வெற்றியின் முதல் படி என வாழ்த்தினார். இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. ஆசிரியை சுபாஷினி நன்றி கூறினார்.