மேலூர், டிச. 24: முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்த ஊரான மேலூர் தும்பைப்பட்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நேற்று அவரது 40வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் வணிகவரி- பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மேலூர், கொட்டாம்பட்டி பிடிஓக்கள், வருவாய் துறை அலுவலர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தும்பைபட்டி ஊர் மக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல் மேலூர் செக்கடியில் உள்ள கக்கன் சிலைக்கு நகர் காங்கிரஸ் செயலாளர் தளபதி மணிகண்டன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், துரைபாண்டியன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.