×

புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

ஈரோடு, டிச.24:  ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா இன்று இரவு தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் உள்ள புனித அமல அன்னை ஆலையத்தில் இரவு 11 மணிக்கு பங்குத் தந்தை ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதேபோல், பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் திருச்சபை, பெந்தகோஸ் தேவாலயம், ரயில்வே காலனியில் உள்ள தேவாலயம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆராதனைகளுடன் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.

Tags : Christmas ,St. Amala Mother Church ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...