×

வெண்ணைமலை அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிய 3 டிப்பர் லாரி, ஜேசிபி பறிமுதல்

கரூர், டிச. 24: கரூர் வெண்ணைமலை அருகே அனுமதியின்றி லாரிகளில் கிராவல் மண் ஏற்றிய சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் வெண்ணைமலை பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் விற்பனை செய்யும் நோக்கில் கிராவல் மண் ஏற்றப்படுவதாக இந்த பகுதி விஏஒ குப்புசாமி வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற வெங்கமேடு போலீசார் அந்த பகுதியில் மூன்று லாரிகளில் கிராவல் மண் ஏற்றப்படுவது தெரிந்து, மூன்று டிப்பர் லாரி, ஒரு ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அருகில் நின்று கொண்டிருந்த ரவிக்குமார்(27) என்பவரை கைது செய்து, தப்பியோடிய மற்றொரு நபரான நல்ல தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : JCP ,Vennamalai ,
× RELATED விவசாயிகள் டெல்லிக்கு ஜே.சி.பி....