×

கரம்பை-ஆலக்குடி இடையே சாலை வளைவில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

வல்லம்,டிச.24: தஞ்சை அருகே சிவகாமிபுரத்தில் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை அருகே கரம்பையில் ஆலக்குடிக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பைக்குகள், கார், ஆட்டோ ஆகியவை தஞ்சை மற்றும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளுக்கு சென்று வருகிறது. மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் செல்கின்றன. மேலும் கரம்பை வழியாக வண்ணாரப்பேட்டைக்கு ரயில்வே கீழ்பாலம் வழியாக கார் மற்றும் பைக்குகள் தினமும் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில் கரம்பையிலிருந்து ஆலக்குடிக்கு செல்லும் வாய்க்கால் அருகே உள்ள சாலையில் வாகனங்கள் திரும்பும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் எதிர் திசைகளில் வரும் வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக பைக்குகளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karambai-Alakkudi ,
× RELATED (வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்