×

செஞ்சி அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை

செஞ்சி, டிச. 24: செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். செஞ்சி அருகே உள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சேகர், விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயல்வெளிக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் மாலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்குமென தெரிகிறது. இதுகுறித்து சேகர் செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ginger ,
× RELATED காளான் கைமா