×

போலி வாரிசு சான்று மூலம் ரூ.50 லட்சம் நிலம் அபகரித்த தம்பதி கைது

சென்னை: ஷெனாய் நகர், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா (38), போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தனது தந்தைக்கு சொந்தமாக ஆவடி முத்தாபுதுப்பேட்டை சாபிக் நகரில் உள்ள 2,400 சதுர அடி காலி மனையை, தனது சகோதரர் சரவணக்குமார் என்பவர், தான் மட்டுமே தன்னுடைய தந்தைக்கு வாரிசு என போலியான வாரிசு சான்று மற்றும் போலி ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை காண்பித்து அவருடைய மனைவி சரஸ்வதிக்கு தான செட்டில்மென்ட் செய்து அபகரித்துள்ளார். எனவே அவரிடம் இருந்து சொத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சரவணக்குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியுடன் சேர்ந்து, போலியான வாரிசு சான்று பெற்று தன்னுடைய தந்தை லோகநாதன் என்பவருக்கு தான் ஒருவர் மட்டுமே வாரிசு என்று கூறி ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து சரவணக்குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியை கைது செய்தனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...