×

போக்சோவில் டீ மாஸ்டர் கைது

மானாமதுரை, டிச.23:  பள்ளி சிறுமியிடம் தகாத வார்த்தையால் பேசி வந்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். திருப்புவனத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் டீக்கடை ஒன்று உள்ளது. அங்கு டீ மாஸ்டராக பணியாற்றி வரும் பெரியசாமி(49), சிறுமியிடம் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறினார். கடந்த 17ம் தேதி கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை மகளிர் ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தகவல் அறிந்து பெரியசாமி தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நேற்று திருப்புவனத்திற்கு வந்த இவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags : Pokோmon ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கியவரை விடுதலை...