×

வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.1.25 கோடியில் திட்ட பணிகள் துவக்கம்

வாடிப்பட்டி, டிச. 23: வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாணாம்பட்டி, சல்லக்குளம், மேட்டுப்பெருமாள் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடக்கவுள்ளன. இதற்கான பூமிபூஜை விழா சாணார்பட்டியில் நேற்று நடந்தது. வெங்கடேசன் எம்எல்ஏ தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தார். இதில் முன்னாள் சேர்மன் கிருஷ்ணவேனி, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவேலு, உதவி பொறியாளர் கருப்பையா, மேற்பார்வையாளர் திலீபன், திமுக நிர்வாகிகள் பால்பாண்டியன், பாலராஜேந்திரன், பிரகாஷ், வக்கீல் கார்த்திக், கருப்பையா, முரளி, அரவிந்தன், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக எம்எல்ஏ, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.


Tags : Vadippatti ,
× RELATED சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்