×

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உள்பட 4பேர் குண்டாசில் கைது

தூத்துக்குடி,டிச.23: கடந்த மாதம் 21ம்தேதி ஏரல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியிடம் அத்துமீறி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிவகளை பகுதியை சேர்ந்த பண்டாரசாமி (48), அவரது மனைவி மாரியம்மாள் (46), இசக்கி மகன் மாடசாமி (எ) பாசி (44) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் ஏரல் போலீசார் கைது செய்தனர். கடந்த 23ம் தேதி 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்திச்சென்ற மாசார்பட்டி, தாப்பாத்தி அகதிகள் முகாமை சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (22) என்பவரை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்குகளில் கைதான மாரியம்மாள், பண்டாரசாமி மற்றும் மாடசாமி (எ) பாசி, சுஜீவன் (எ) சந்தோஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜெயக்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 4பேரையும் குண்டர் சடத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் எட்டயபுரம் மற்றும் ஏரல் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை பாளை மத்திய சிறையில் வழங்கினர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 26 பேர், கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் உட்பட 199 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kundas ,Thoothukudi ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது