×

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அலுவலக ஊழியர்கள் கிறிஸ்துமஸ் கூடுகை விழா பேராயர் தேவசகாயம் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.23: தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அலுவலக ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் கூடுகையில் பேராயர் தேவசகாயம் பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அலுவலக ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் கூடுகை விழா திருமண்டல கூட்டரங்கத்தில் நடந்தது. விழாவில், திருமண்டல பேராயர் தேவசகாயம் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் செய்தி அளித்து திருமண்டலத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில், திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், திருமண்டல மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் மற்றும் திருமண்டல ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thoothukudi ,Nazareth Diocesan Office ,Archbishop ,Devasakayam ,Christmas ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...