×

நெல்லையில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்

நெல்லை, டிச. 23: நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருவதன் காரணமாக  சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணி  நடந்து வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாநகராட்சியில் தற்போது அருணகிரி தியேட்டர் அருகில் மற்றும் டவுன் ஆர்ச் பகுதியில்  பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்றதன் காரணமாக இந்த இடங்களில் தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.   மேலும், டவுன் ஆர்ச் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளும் நடப்பதை முன்னிட்டு அப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.    பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்ற இடங்களில் தொடர்ந்து நெல்லை மாநகராட்சியால் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!