×

ஆரணி அருகே வாத்து வியாபாரி மகன் பைக் விபத்தில் பலி

ஆரணி, டிச.23: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மதுக்கூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(50). வாத்து வியாபாரி. இவர் தனது மகன் அற்புதராஜூடன் சேத்துப்பட்டு அருகே சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வாத்துகளை வைத்து மேய்த்து வருகின்றனர். இந்நிலையில், ராஜ்குமார் தனது மகன் அற்புதராஜை நேற்று முன்தினம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்த விவசாய நிலத்தில் வாத்து வைப்பதற்காக இடங்களை பார்த்து விட்டு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அற்புதராஜ் தனக்கு சொந்தமான பைக் எடுத்துக்கொண்டு ஆரணிக்கு சென்றுள்ளார். மேலும், அற்புதராஜ் ஆரணியில் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் பைக்கில் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அற்புதராஜ் மீது மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார். உடனே அவ்வழியாக வந்த பொதுமக்கள் அற்புதராஜை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தந்தை ராஜ்குமார் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...