×

வேலாயுதம்பாளையம் அருகே டூவீலர் மீது லோடு ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் காயம்

வேலாயுதம்பாளையம், டிச. 23: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மோகன்ராஜ்(21). கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மோகன்ராஜ் தனது டூவீலரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புன்னம்சத்திரம் - பவுத்திரம் சாலையில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோகன்ராஜ் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மோகன்ராஜை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார், பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் ஈஸ்வரமூர்த்தி(43) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Velayuthampalayam ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்