×

தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் பணி காலதாமதமாவதை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

வேதாரண்யம், டிச.23: வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் பணி காலதாமதமாவதை கண்டித்து பொதுமக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர் ஆதார் அட்டை எடுக்கவும் மற்றும் பிழை திருத்தம் செய்யவும் வந்திருந்தனர். ஏற்கெனவே இங்கு இரண்டு ஆதார் மையங்கள் செயல்பட்டு வந்தது. இதில் ஒன்று செயல்படாததால் தாலுகா அலுவலகத்தில் உள்ள மையத்தில் ஒரு நாளைக்கு 70 நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். தொடர்ந்து கூட்டம் அதிகமானதால் டோக்கன் கொடுத்து பதிவு முறையை நடைமுறைப்படுத்தினர். இந்நிலையில் நேற்று ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால், ஆதார் அட்டை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் காலதாமதமாவதை கண்டித்து தாலுகா அலுவலகம் முன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவுக்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

Tags : Aadhar ,Dashildar ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்...