×

கந்தர்வகோட்டை பள்ளியில் பழமையான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

கந்தர்வகோட்டை, டிச.23: கந்தர்வகோட்டையில் சிதிலமடைந்து காணப்படும் பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை உள்ள வகுப்புகளில் 960 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி வளாகம் முன்புஉள்ள கட்டிடத்தில் அறிவியல் ஆய்வகமும், மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான அறிவியல் பாடப்பிரிவு வகுப்பும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளி கட்டிடம் சிதிலமடைந்ததால் பள்ளியில் உள்ள வேறு கட்டிடத்திற்கு இதனை மாற்றம் செய்து கட்டிடத்தை பழுதடைந்த பகுதியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்துவிட்டனர். இந்நிலையில் இதுவரை சிதிலமடைந்த கட்டிடத்தை இடிக்காமல் மறைவு கட்டி வைத்துள்ள நிலையில், பள்ளியின் சுவர்கள் இடிந்த வண்ணம் உள்ளது. மாணவர்கள் செல்லும் வழியில் இந்த கட்ட்டம் உள்ளதால் இதனை உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kandarwakottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் காய்கறி செடிகள் அமோக விற்பனை