×

ஏழை எளியவர்களுக்கு மனை பட்டா, இலவச வீடு; கருப்புடையான்பட்டி ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு

கந்தர்வகோட்டை, டிச. 22: புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கருப்புடையான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ஐயப்பனிடம் சிபிஐ (எம்.எல்) கட்சியின் சார்பாக கட்சியின் ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமையில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும், பட்டா உள்ள மக்களுக்கு இலவச வீடு கட்டித் தர வேண்டியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையும், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டையும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து கருப்புடையான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ஐயப்பனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

Tags : Panchayat ,President ,Karuppudaiyanpatti ,
× RELATED திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த...