×

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம்

பெரம்பலூர், டிச.22: பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள், வீட்டு உரிமையாளர் பட்டா தொடர்பான பிரச்ச னைகளுக்கு தீர்வு காண இன்று (22ம்தேதி) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிரா மத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள், ஒவ்வொரு வரு வாய் வட்டத்திலும் நடத்தப்பட்டு பொங்கல்திருநாளுக் குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ் நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளைத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று(22ம்தேதி) பெரம்பலூர் தாலுக்காவில்அம்மா பாளையம், களரம்பட்டி வரு வாய் கிராமங்களைச் சேர்ந் தவர்களுக்கு அம்மாபாளையம், ஆதிநாட்டார் மண்டபத் திலும், வேப்பந்தட்டை தாலுக்காவில் மேட்டுப்பாளையம் (வ), மேட்டுப்பாளையம் (தெ) வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மேட்டுப்பாளையம் (தெ) ராஜிவ்காந்தி சேவாகேந்திரா மையக் கட்டிடத்திலும், குன்னம் தாலுக்காவில் கீழப்புலியூர் (வ), கீழப்புலியூர் (தெ) வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு கீழப்பு லியூர் நிலஅளவையர் அலுவலகத்திலும், ஆலத்தூர் தாலுக்காவில் ஆதனூர் (வ), ஆதனூர் (தெ), கூத்தூர் வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு கூத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Patta Correction ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி