×

குத்தாலம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் குறைதீர் முகாம்

குத்தாலம், டிச.22: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா சிவனாகரத்தில் மக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது. முகாமில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாகண்ணன் வரவேற்றார். மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மேலும் இந்த முகாமில் பட்டா மாற்றம் மற்றும் திருத்துதல், சாலைகள், படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற மனுக்கள் அதிகமாக முகாமில் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.

முகாமில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள் மங்கை.சங்கர், முருகப்பா, குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா, சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் காந்திமதி, ஆணையர் சுமதி, பிடிஓ கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் கோபி, மருத்துவ மேற்பார்வையாளர் அமிர்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இதேபோல கோடிமங்கலம், கோனேரிராஜபுரம், பாலையூர், பருத்திக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற்றது.

Tags : Kuradir ,Kuthalam ,
× RELATED மாவட்டத்தில் 550 எக்டேரில் தக்காளி...