நெல்லை, டிச. 21: கடையநல்லூர் ஒன்றியம் கம்பனேரி ஊராட்சி வலசை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகம், வகுப்பறை, சமையலறை, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், மாணவ- மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை, ராஜா எம்எல்ஏ, ஆதிதிராவிட நல அலுவலர் கந்தசாமி, ஹென்றி பீட்டர், வசந்தகுமார், கடையநல்லூர் யூனியன் சேர்மன்கள் கடையநல்லூர் சுப்பம்மாள் பால்ராஜ், தென்காசி ஷேக் அப்துல்லா, சங்கரன்கோவில் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட பொறுப்புக்குழு சேக்தாவூது, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, யூனியன் துணை தலைவர்கள் கடையநல்லூர் ஐவேந்திரன் தினேஷ், தென்காசி கனகராஜ் முத்துபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கீதாமணிகண்டன், அருணாசலபாண்டியன், சிங்கிலிபட்டி மணிகண்டன், சண்முகையா, பகவதியப்பன், மாரிச்செல்வி, மாரியம்மாள், முருகன், சித்ரா, செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், நெல்லை மத்திய மாவட்ட துணை செயலாளர் மணி, கம்பனேரி ஊராட்சி தலைவர் சொர்ணம், துணை தலைவர் கவுரி, வலசை கிளை செயலாளர் சுரேஷ், முத்தையா, மாரிக்கனி மாரிச்சாமி, சாமித்துரைஉள்பட பலர் பங்கேற்றனர்.