தூத்துக்குடி, டிச. 21: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் (23ம் தேதி) நடைபெற உள்ளதாக மாவட்டப் பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் (23ம் தேதி) மாலை 4 மணிக்கு, திருநெல்வேலி- பாளை சாலையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிர்புறம் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும். கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை வகிக்கிறார். இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
எனவே தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.