×

14வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

திட்டக்குடி, டிச. 21:   திட்டக்குடி பகுதியை சேர்ந்த 14 சிறுமி திட்டக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை என அவரது தாய் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணக்கொடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் சிறுமிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இணையதள வகுப்பு நடைபெற்ற போது சிறுமியின் பெற்றோர் இணையதள வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக இணையதள வகுப்பில் படித்து வந்த சிறுமி சமூக வலைதளமான ஷேர் சாட் மூலமாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சின்னராஜா (21) என்ற வாலிபர் செல்போனில் சமூகவலைதளமான ஷேர் சாட் மூலமாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
 இதனையடுத்து போலீசார் செல்போன் சிக்னலை வைத்து சிறுமி வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் அண்ணக்கொடி தலைமையிலான போலீசார் வேளாங்கண்ணி விரைந்து சென்று சிறுமியையும் கடத்தி சென்ற சின்னராஜா ஆகியோரை மீட்டு திட்டக்குடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சின்னராஜாவை கைது செய்தனர்.  

Tags : Pokmon ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது