×

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச. 21: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆலோசகர் பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள் மாரிமுத்து, திருநாவுக்கரசு, சாந்தகுமார் வாசவி, உமா மகேஸ்வரி, ஜெயச்சந்திரன், லட்சுமி நாராயணி, சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Tags : Co-operative Bank ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...