×

செம்மலாபட்டியில் அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பொன்னமராவதி, டிச.21: பொன்னமராவதி அருகே ஆலவயல் செம்மலாபட்டியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் கலைபயண குழுவினரின் செம்மலாபட்டி தொடக்கபள்ளியில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலராக சேர்வது பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் நடித்து காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியிலிருந்து மாணவர்களிடம் கேள்விகேட்கபட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊராட்சித் தலைவர் சந்திராசக்திவேல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, ஆசிரிய பயிற்றுனர்கள் சிவகுமார், கல்யாணி யசோதா,கவிதா , செம்மலாபட்டி தொடக்கபள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன், ஊராட்சி செயலர் பஞ்சவர்ணம் ,வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness Art Show ,Semmalapatti ,
× RELATED இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி