×

ஒரத்தூரில் குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு

நாகை, டிச.20: நாகை அருகே ஒரத்தூர் பிடாரி குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன் இவருக்கு திருமாணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், ரக்சன் என்ற இரண்டு வயதில் ஆண் குழந்தை இருந்தது. அன்பரசனின் மனைவி குழந்தை ரக்சனை வீட்டில் இருந்த மாமியாரிடம் விட்டு விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்தபோது, வீட்டின் பின் புறத்தில் ஊள்ள பிடாரி குளத்தில் குழந்தை மூழ்கி கிடந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Orathur ,
× RELATED ஒரத்தூர் சாம்பான் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி