×

ஊத்தங்கரையில் உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஊத்தங்கரை, டிச.20:  ஊத்தங்கரையில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஊத்தங்கரை வேளாண்மை உதவி இயக்குநர் தாமோதரன் மற்றும் தாசில்தார் தெய்வநாயகி ஆகியோர், உரக்கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பழைய இருப்பாக உள்ள பொட்டாஷ், யூரியா உரங்களை பழைய விலைக்கே விற்கவேண்டும் எனவும், புதிய விலையில் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது எனவும் வலியுறுத்தினர். பழைய இருப்பு பொட்டாஷ் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985ன் கீழ் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags : Uttaranchal ,
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்