×

வருசநாடு மலையில் கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

வருசநாடு, டிச.20: வருசநாடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வருசநாடு அருகே பண்டாரவூத்து மலைப்பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வருசநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதியில் உள்ள முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணையில் கஞ்சாவை பதுக்கி வைத்தவர்கள் வருசநாட்டை சேர்ந்த செல்வம்(40), காமன்கல்லூரை சேர்ந்த ஆண்டவர்(56) என தெரியவந்தது. இதனையடுத்து வருசநாடு பகுதியில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்பு போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Varusanadu hill ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு