×

திருப்பூர் மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா

திருப்பூர், டிச. 20: திருப்பூர் மாவட்டத்தில் நேற்ற பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது. மறைந்த திமுக  முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு  திருப்பூர் மத்திய மாவட்ட  திமுக அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது. திமுக மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி. மு.நாகராசன், தினேஷ்குமார், முன்னாள் மாநகர பொறுப்பாளர்  மேங்கோ பழனிசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, மாவட்ட  இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, 15ம் வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ். நிர்வாகிகள் சிவபாலன்,  திலக்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்: தாராபுரம் நகர ஒன்றிய, இளைஞரணி திமுக சார்பில் நகர செயலாளர் தனசேகர் தலைமையில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் அன்பழகனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, வழக்கறிஞர் மணிவண்ணன் பொறியாளர்கள் பாப்பு கண்ணன், முருகானந்தம், அவைத்தலைவர் ராஜேந்திரன் உதயச்சந்திரன், உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருமுருகன்பூண்டி: திருப்பூர் வடக்கு மாநகரம், 12வது வட்டக்கழக சார்பில் 15-வேலம்பாளையம்  பஸ் நிலையம் அருகே வடக்கு மாநகர  பொறுப்புக்குழு உறுப்பினரும், 12வது வட்ட பொறுப்பாளருமான சிட்டி  வெங்கடாசலம்  தலைமையில் அன்பழகனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. வட்ட கழக பொறுப்புக்குழு  உறுப்பினர்கள் செந்தில்குமார், குழந்தைவேல், நாகராஜ்,  பெருமாள், பாலசுப்பிரமணியன், தங்கமுத்து,  சந்திரசேகர், சண்முகம், இளைஞரணி செயலாளர் கார்த்திக் குமார், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Prof. ,Anpalagan ,Tirupur District ,
× RELATED கவுன்சலிங் ரூம்