×

தார்பாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெயின்டர் வெட்டிக் கொலை: உடன் சென்ற நண்பர் மாயம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தார்பாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெயின்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடன் சென்ற அவரது நண்பர் மாயமானார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்(30). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் அவரது நண்பரான அதே பகுதியை ேசர்ந்த அவரது நண்பர் அன்பு(22) என்பவருடன் பைக்கில் தாம்பரம் அடுத்த ேசலையூருக்கு பெயின்டிங் வேலைக்கு சென்றனர். இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் நிலையில் இருந்தது.

இந்நிலையில், அக்கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் நேற்று முன்தினம் நள்ளிரவு தார்பாயில் மூடி கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் வெட்டுக்காயங்களுடன் ஒரு ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்த சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தார்பாயை திறந்து பார்த்ததில், ஒரு வாலிபர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் தலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதும், அவர் காணாமல் போன சங்கர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சங்கரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக பெயின்டர் சங்கரை ஏதேனும் கும்பல் வெட்டி கொன்றதா அல்லது கள்ளக்காதல் தகராறில் கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். மேலும், இவருடன் சென்ற அன்பு என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரும் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர்தான் சங்கரை கொலை செய்தாரா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Vettik ,
× RELATED சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை