×

திருச்சி மாவட்டத்தில் 4 தாலுகாவில் இன்று சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருச்சி, டிச.20: திருச்சி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், லால்குடி தாலுகாவில் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவிலும், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் காலை 11 மணியளவிலும், ரங்கம் தாலுகாவில் திருச்சி-திண்டுக்கல் சாலை, தாயனூர் கேர் கல்லூரியில் மதியம் 1 மணியளவிலும், திருச்சி மேற்கு தாலுகாவில் திருச்சி கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பிற்பகல் 3 மணியளவிலும் நடைபெற உள்ள சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர்களிடம் வழங்கி உரிய தீர்வு கண்டிட திருச்சி கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : 4 ,Trichy district ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...