×

சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்

புதுக்கோட்டை, டிச.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாகக் கண்காணிக்கச் சிறப்புப் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது, ஆய்வின்போது கூடுதல் விலைக்கு விற்பது கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை விடுத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 94,205 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்காச்சோளம், உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் பொட்டாஷ் உரம் இடும் பருவத்தில் உள்ளது. தற்போது புதிதாகப் பெறப்படும் பொட்டாஷ் உர மூட்டை ஒன்றின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.1,700ஆகும். இந்த விலையேற்றம் கடந்த 8ம் தேதிக்குப் பின் புதியதாக வரப்பெற்ற பொட்டாஷ் உரத்திற்கு மட்டும் பொருந்தும்.

ஏற்கெனவே இருப்பிலுள்ள பொட்டாஷ் உரத்தை மூட்டையின்மேல் அச்சிடப்பட்டுள்ள ரூ.1,040 என்ற விலைக்கே விற்பனை செய்ய வேண்டும். இருப்பிலுள்ள பொட்டாஷ் உர மூட்டைகளை ரூ.1,040க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்திட மாவட்ட அளவில் சிறப்புப் பறக்கும் படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு கண்காணிப்பு குழுவின் ஆய்வின்போது கூடுதல் விலைக்குப் பழைய பொட்டாஷ் உர மூட்டையினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உர விற்பனையாளர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும், ஆய்வின்போது பொட்டாஷ் உரத்தினைக் கள்ளச் சந்தையில் விற்பது, பதுக்குவது, பிற மாவட்டங்களுக்கு கடத்துவது மற்றும் விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காக பயன்படுத்துவது போன்ற நிகழ்வுகள் கண்டறியப்பட்டால் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Achievement Photo Exhibition ,Pudukottai district ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்