×

அரியலூர், ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கியில் தவணை தவறிய பண்ணைசாரா கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிப்பு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தகவல்

அரியலூர், டிச.20: அரியலூர் மண்டலத்தில் செயல்பட்டு வரும் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான ஓருமுறை கடன் தீர்வு திட்டத்தின் செயலாக்க காலம் வரும் டிசம்பா் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மண்டலத்தில் 15 நபா்கள் ரூ.35 லட்சத்து 34 ஆயிரம் (அசல் மற்றும் வட்டியுடன்) செலுத்தவேண்டிய தொகையாகும். அரசாணையில் தொிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்கனவே 25 சதவீதம் செலுத்தி உள்ள கடன்தார்கள் மீதமுள்ள 75 சதவீதம் தொகையை செலுத்துவதற்கு ஏதுவாகவும் மற்றும் இதுவரை இந்த திட்டத்தில் சேராதவா்கள் உடனடியாக இந்த திட்டத்தில் சோ்ந்து ஓரே தவணையில் முழுமையாக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் கடனை திருப்பி செலுத்தி பயனடையலாம்.இந்த தகவலை அரியலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags : Ariyalur ,Jayankondam Co-operative Bank ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...