குலசேகரம், டிச. 20: திருவட்டாரை அடுத்துள்ள செங்கோடி பகுதியில் தென்கரை தர்மசாஸ்தா காவு கோயில் உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று சிலர் கோயிலையொட்டிய குளத்தில் குளித்து விட்டு சாமி கும்பிட சென்றனர்.அப்போது மர்ம நபர்கள் ேகாயில் கற்சிலைகளை தூக்கி வீசி இருந்தது தெரிய வந்தது. நாகர், சிவலிங்கம் உள்பட 18 சிலைகளை தூக்கி வீசி இருந்தனர். இந்த தகவல் பரவியதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா ேசாமனும் அங்கு சென்றார். இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மகேஷ்(31) என்பவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் போதையில் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேஷை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போதையில் சிலைகளை தூக்கி வீசியதும், 4 சிலைகளை குளத்தில் தூக்கி வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிலைகளை குளம் மற்றும் அப்பகுதியில் இருந்து மீட்டனர். இது குறித்து போலீசார் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.