×

கடன் பாக்கியை கேட்டு டெய்லரை தாக்கிய இரட்டை சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி, டிச.18: திருச்சி உறையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அங்குசாமி(40), டெய்லர். இவர் தனது உறவினரான இரட்டை சகோதரர்கள் ராமர்(32), லட்சுமணன்(32) ஆகியோரிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியிருந்தார். இதில் ரூ.70 ஆயிரத்தை அங்குசாமி திருப்பி கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தை 3 மாதங்களில் தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இந்திரா நகர் அருகே உள்ள பீரோ கம்பெனி முன் நின்றிருந்த அங்குசாமியை ராமர், லட்சுமணன், செந்தில்குமார்(எ)எட்டி(54) ஆகியோர் சென்று ரூ.30 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் அங்குசாமியை 3 பேரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து ராமர், லட்சுமணன், செந்தில்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : Taylor ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...