×

தத்தமஞ்சி ஊராட்சியில் பட்டா சிறப்பு முகாம்

பொன்னேரி. டிச.18: மீஞ்சூர் ஒன்றியம், தத்தமஞ்சி ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் தத்தமஞ்சி ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருள்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சரசு வரவேற்றார்.

இதில், வருவாய் ஆய்வாளர் சஞ்சீவி பெருமாள். விஏஓக்கள் ஈஸ்வரி, அம்சா, பிரபுசங்கர், கிராம உதவியாளர் சாந்தி, வெங்கட்ராமன், வார்டு உறுப்பினர்கள் முரளி, சங்கீதா, கன்னியம்மா, மலர்விழி பாலகிருஷ்ணன், இளங்கோவன், தூய்மைப் பணியாளர்கள் கீதா, எல்லம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Patta ,Thattamanchi Panchayath ,
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக...