×

மானாமதுரை நகராட்சி வார்டு மறுவரையறைக்கான ஆட்சேபனை தெரிவிக்கலாம்

சிவகங்கை, டிச.18: சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சியின் 27 வார்டுகளுக்கான வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு இன்று வெளியிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்கள் ஏதும் இருப்பின் இன்று முதல் டிச.24க்குள் மானாமதுரை நகராட்சி வார்டுகளின் மறுவரையறை அதிகாரி, நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் சமர்ப்பிக்கலாம்.

மேலும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டங்கள் டிச.20 முதல் டிச.24வ ரை மறுவரையறை ஆணையத்தால் ஆறு மண்டலங்களில் நடத்தப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கூட்டம் டிச.20 அன்று பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் மானாமதுரை நகராட்சியின் வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீது ஏதும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்கள் இருப்பின் நேரடியாகவோ, மனுவாகவோ அளிக்கலாம்.

Tags : Manamadurai Municipal Ward ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...