×

ரங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸ் திறப்பு விழா

சிங்கம்புணரி, டிச.18: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி விளக்கில் நவீன வசதிகளுடன் ரங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸ் ஏசி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முன்னாள் எம்எல்ஏ அருணகிரி, சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ரஞ்சன்துரை முன்னிலை வகித்தனர். கோல்டன் பேலஸ் உரிமையாளர்கள் தமிழரசன், சிவக்குமார், ஆனந்தகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றனர். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், பாலசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய இளைஞரணி மனோகரன், கழக பிரமுகர்கள் புகழேந்தி, குடோன் மணி, நகர இளைஞரணி அருண்பிரசாத், தொழிலதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Ranganathan Gandhimati Golden Palace Opening Ceremony ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...